செவ்வாய், 6 டிசம்பர், 2011

கனவு – 2


கனவு – 2
டிக்கும் போது கூட (பள்ளிப்படிப்பு) தற்போது திரு.அப்துல்கலாம் அவர்கள் கூறியது போல அதிக கனவுகள் காண்பதுண்டு ஏதேனும் பலிக்கக் கூடாதா? என்று. நான் படித்தது உயர்நிலைப்படிப்பு அன்றைய 11ம் வகுப்பு பொறியியல் துறை விருப்பப்பாடமாக எடுத்து படிக்கும் போது கூட அதில் ஒரு பாடப்பிரிவான தச்சுத்தொழில் மற்றும் தகரத்தொழில் கற்றதால் எனக்கு சொந்தமான வீடு கட்டுமானப் பணியினை என் மனதில் கற்பனையாய் வரிந்து இருந்தேன். அது எப்போது நனவாகுமோ? தற்போது கூட கட்டுமானத்துறையில் பலப்புதிய நுணுக்கங்களைக் கொண்டு நல்லதொரு வீட்டை வடிவமைத்துள்ளேன்(கற்பணையில்) காலம் தான் பதில் தரும்.
ன் மகன் நான் படிக்க முடியாத பொறிஞர் பட்டயப்படிப்பு படித்தது கண்டு மிகவும் சந்தோசப் படுகிறேன். அதே நேரத்தில் அவருக்கு படிப்புக்குத் தகுந்த நல்லதொரு தொழில் அமைந்து அவரது வாழ்க்கை சிறக்கக் கனவுக் காணுகிறேன். பிறகுதான் இதற்க்கு முன் நான் கண்ட கனவை நனவாக்க வாய்ப்பு வரும்.
ன்னடா இவன் இதுவரை தன் வாழ்க்கைக்கனவுப் (சுயநலமாய்) பற்றியே கூறுகிறேனே என்று திட்டாதீர்கள். எனக்குப் பொதுநலத்திலும் அக்கறையுண்டு நம் நாடு என்பதைவிட உலகம் முழுவதும் ஒன்றாய் வாழ (ஒற்றுமையாய்) அந்த உலகைக் காண்பதற்க்கு. எங்குப்பார்த்தாலும் சன்டை மொழி வாரியாய், இனவாரியாய் இது இல்லாமல் உள்ள உலகைக் காணக் கனவுக்காணுகிறேன்.
ங்கு பணிப் புரியுமிடத்தில் கூட அனைவரும் கேட்பதுண்டு ஏன் தங்களுக்குக் கோபமே வராதா? என்று நான் இருக்குமிடத்தில் எப்போதும் கலகலப்பாய். பொதுவாய் சிந்தித்துப்பார்த்தால், கோபப் பட்டவன்கூட நான் ஏன் கோபப்பட்டோம் என்று வெட்கித்தலை குனியவேண்டும்.
கனவுகள் தொடரும்….               

Post Comment